எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:
-
- இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
- ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
- நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
- தம்மதென்று தாமிருக்கும் தாம்
-
- மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
- வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
- பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
- பித்தானால் என்செய்வாள் பின்
-
- ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
- அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
- நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
- என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
-
- நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
- பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
- அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
- அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
- வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
- வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
- நெஞ்சே உனக்குபதேசம் இதே...
-
- நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
- நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
- பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
- புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
- காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
- கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
- ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
- அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
No comments:
Post a Comment